யு.எஸ்.கோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்க சோனியா காந்திக்கு ஜனவரி 2-ந்தேதி வரை அவகாசம்

Subscribe to Oneindia Tamil

US court asks Sonia Gandhi to respond sikh riots case by January 2
நியூயார்க்: சீகியர் கலவர வழக்கில் அமெரிக்கா நீதிமன்றம் அனுப்பிய் நோட்டீசுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஜனவரி 2-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதலை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பது, பதவி உயர்வு அளிப்பது போன்ற செயல்களை கண்டித்து சோனியா காந்தி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர்கள் நீதிக்கான உரிமைக்குழு வழக்கு தொடர்ந்தது.

இதற்கு விளக்கம் கேட்டு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சோனியா காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. நியூயார்க் ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அந்த மருத்துவமனை ஊழியரிடம் நோட்டீசை நீதிமன்ற ஊழியர் வழங்கினார்.

ஆனால் சோனியா காந்தியோ, மருத்துவமனை நிர்வாகமோ அந்த நோட்டீசை பெற்றுக் கொண்டதாக கூறவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நோட்டீசுக்கு சோனியா காந்தி ஜனவரி 2-ந் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+