கலவரத்தில் சீக்கியர்கள் பலி... சோனியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்
நியூயார்க் : சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இ்நத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி, அமெரிக்காவில் உள்ள நீதிக்கான சீக்கியர்கள் என்ற சீக்கிய அமைப்பு, அங்குள்ள மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரையன் கோகன், வழக்கில் உள்ள அனைத்து சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தது எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சீக்கிய அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ததுடன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து இந்த வழக்கில் மறுவிசாரணை கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக சீக்கிய அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications