56 வருட குரோதம் முடிவுக்கு வருகிறது.. பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் அமெரிக்கா, கியூபா!
வாஷிங்டன் : அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்து வந்த விரோதம் மறைந்து நட்பு பாராட்டத் தொடங்கியுள்ள அமெரிக்காவும், கியூபாவும் இருநாட்டு உறவு குறித்து இம்மாதம் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுடன் கடந்த 56 ஆண்டுகளாக பகைமை பாராட்டி வந்தது கியூபா. இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நல்லெண்ண நடவடிக்கைகளால் இருநாடுகளும் நட்பு நாடாக மாறியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது அமெரிக்காவின் இந்த முடிவு.

இந்நிலையில், இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் அமெரிக்க - கியூபா பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜென் பாகி.
ஹவானாவில் நடைபெற உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் அமைச்சர் ராபர்ட் ஜேக்கப்சன் தலைமை தாங்குகிறார். தற்போது பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கும் ராபர்ட் ஜேக்கப்சன் ஏற்கனவே பலமுறை அமெரிக்கா சார்பில் கியூபா சென்று வந்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளின் படி இருநாடுகளிலும் அந்நந்த நாடுகளின் தூதரகங்களை அமைப்பது மற்றும், தூதர்களை நியமிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications