பாகிஸ்தானுக்கு திடீரென அதிகரித்த அமெரிக்காவின் சப்போர்ட்.. வெளியான முக்கிய அறிவிப்பு! சீனா ஷாக்
வாஷிங்டன்: பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் இயங்கி வரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
அதேபோல இந்த அமைப்பின் துணை அமைப்பாக இருக்கும் மஜீத் படைப்பிரிவையும் வெளிநாடு தீவிரவாத அமைப்பின் லிஸ்டில் அமெரிக்கா சேர்த்திருக்கிறது.

இந்த அமைப்புகள் பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, பலூசிஸ்தான் எனும் தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஈரான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை சுமார் 44% அளவுக்கு பலூசிஸ்தான் மாகாணம் பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் தாய் மொழி உருது கிடையாது. பலூச் மொழியைதான் இவர்கள் பேசுகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, பாகிஸ்தானுடன் இவர்கள் வேறு வழியில்லாமல் சேர்ந்துக்கொண்டனர்.
ஆனால் பலூசிஸ்தான் மாகாணத்தில் போதுமன வளர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
சமீபத்தில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தை தாக்கியது. இந்த சமயத்தில், பாகிஸ்தான் ராணுவத்தை உள்ளிருந்து தாக்கியவர்கள்தான் இந்த பலூசிஸ்தான் அமைப்பினர். இவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து தலைவலியாக இருந்து வருகின்றனர். ஆனால் சீனா இவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இது பாகிஸ்தான் அரசுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பலூஸ்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகள் இனி நியாயப்படுத்திக்கொள்ள முடியும். இந்த அறிவிப்பால் பாலூசிஸ்தான் மக்கள் சமாதானம் ஆகாமல் இன்னும் ஆக்ரோஷமாக பாகிஸ்தான் அரசுடன் மோதிக்கொண்டிருப்பார்கள் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.












Click it and Unblock the Notifications