ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா.. பயம் காட்டும் புதிய வகை போர் விமானம்!
சனா: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக அமெரிக்கா B-2 ஸ்டெல்த் பாம்பர்களை களமிறக்கியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில், ஹமாஸை அழிப்பதாக கூறி, பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் சர்வ நாசம் செய்துவிட்டது. ஐநா மன்றத்தில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் கூட இஸ்ரேல் தனது தாக்குதலின் தீவிரத்தை குறைக்கவில்லை. மறுபுறம் ஹமாஸுக்கு ஆதரவாக ஏமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல்களை தொடுத்தனர்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் செங்கடலில் நுழையும் எந்த கப்பலையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலும் வணிக கப்பல்கள்தான் இந்த தாக்குதலால் பாதிக்கப்படட்ன. ஏடன் வளைகுடாவிலும் ஹூதி ஆட்டம் கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடந்த அமெரிக்கா சமயம் பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஹூதி அமைப்பின் ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்கா சரமாரிகாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
இதற்காக B-2 ஸ்டெல்த் பாம்பர் எனும் அதிநவீன போர் விமானத்தை அமெரிக்கா களமிறக்கியுள்ளது. பொதுவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்களின் ஆயுதங்களை பூமிக்கு அடியில் பாதுகாப்பாக சுரங்கம் தோண்டி மறைத்து வைத்திருப்பார்கள். சாதாரண போர் விமானங்களால் இந்த ஆயுதங்களை அழிக்க முடியாது. எனவேதான் B-2 ஸ்டெல்த் பாம்பர் களமிறக்கப்பட்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, ரேடாரில் தெரியாமல் மறைவதுதான். எனவே நினைத்த இடத்திற்கு இதனால் தடையின்றி செல்ல முடியும். மட்டுமல்லாது மற்ற போர் விமானங்களை ஒப்பிடுகையில் இது அதிக அளவுக்கு ஏவுகணைகளை ஏந்தி செல்லும். ஏவுகணைகள், கொத்து குண்டுகள் என சுமார் 18,144 கி.கி எடை கொண்ட ஆயுதங்களை சுமந்துக்கொண்டு, 11,100 கி.மீ தூரம் வரை பறக்க முடியும். எனவே ஏமனின் ஹூதி இலக்குகள் எல்லாம் இதற்கு ஜூஜூபி.
தற்போது நடந்து வரும் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதில் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நேரடியாக போரில் இறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மறுபுறம், ஹூதி இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்காமல் ரஷ்யாவுடன் இணைந்து, தந்திரமான முறையில் பதிலடி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் போர்கள் இல்லாத உலமே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு











Click it and Unblock the Notifications