நேபாளத்தில் அமெரிக்க ராணுவ மீட்பு ஹெலிகாப்டர் மாயம்- 8 வீரர்களின் நிலைமை என்ன ஆனது?
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரைக் காணவில்லை. அதில் இருந்த 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.
நேபாளத்தில் கடந்த மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியதையடுத்து மீட்புப் பணியில் பல்வேறு நாட்டு ராணுவத்தினரும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் நேற்றும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந் நிலையில் நேபாளத்தில் செரிகோட் என்ற கிராமத்தின் அருகே நேற்று மாலை 6 அமெரிக்க வீரர்கள், 2 நேபாள ராணுவத்தினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் மாயமானது. அது விபத்துக்குள்ளாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. அதில் இருந்த 8 பேரின் நிலைமையும் தெரியவில்லை.
இந்த ஹெலிகாப்டர் பறந்த பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரும் பறந்து கொண்டிருந்தது. இரு ஹெலிகாப்டர்களும் தகவல் பறிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தன.
ஆனால், அமெரிக்க ஹெலிகாப்டர் கீழே விழுந்த சத்தமோ அல்லது கீழே விழுந்ததால் ஏற்பட்ட தீ காரணமாக எழும் புகைமூட்டம் ஏதும் காணப்படவில்லை. இதனால் அந்த ஹெலிகாப்டர் பெரிய அளவில் விபத்தை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது.
ஆனால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அமெரிக்க ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகி இருள் சூழ்ந்துவிட்டதால் தேடுதல் வேட்டையும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இன்று காலை வரை அந்த ஹெலிகாப்டருடன் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
-
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications