Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாளத்தில் அமெரிக்க ராணுவ மீட்பு ஹெலிகாப்டர் மாயம்- 8 வீரர்களின் நிலைமை என்ன ஆனது?

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரைக் காணவில்லை. அதில் இருந்த 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

நேபாளத்தில் கடந்த மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியதையடுத்து மீட்புப் பணியில் பல்வேறு நாட்டு ராணுவத்தினரும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் நேற்றும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

US military helicopter missing in Nepal with eight on board

இந் நிலையில் நேபாளத்தில் செரிகோட் என்ற கிராமத்தின் அருகே நேற்று மாலை 6 அமெரிக்க வீரர்கள், 2 நேபாள ராணுவத்தினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் மாயமானது. அது விபத்துக்குள்ளாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. அதில் இருந்த 8 பேரின் நிலைமையும் தெரியவில்லை.

இந்த ஹெலிகாப்டர் பறந்த பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரும் பறந்து கொண்டிருந்தது. இரு ஹெலிகாப்டர்களும் தகவல் பறிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்தன.

ஆனால், அமெரிக்க ஹெலிகாப்டர் கீழே விழுந்த சத்தமோ அல்லது கீழே விழுந்ததால் ஏற்பட்ட தீ காரணமாக எழும் புகைமூட்டம் ஏதும் காணப்படவில்லை. இதனால் அந்த ஹெலிகாப்டர் பெரிய அளவில் விபத்தை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க ராணுவம் கருதுகிறது.

ஆனால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அமெரிக்க ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகி இருள் சூழ்ந்துவிட்டதால் தேடுதல் வேட்டையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இன்று காலை வரை அந்த ஹெலிகாப்டருடன் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+