கடத்தல் மன்னன் சுபாஷ் கடத்திய ரூ.645 கோடி கலைபொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் அமெரிக்கா!
நியூயார்க்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி வரப்பட்ட ரூ.645 கோடி மதிப்புள்ள சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் கபூர். தொழில் அதிபரான அவர் மான்ஹட்டன் நகரில் பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவர் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்தார்.

இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் உள்ள அவரது நிறுவனங்களில் சோதனை நடத்திய போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரத்து 622 கடத்தல் கலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.645 கோடி ஆகும்.
கல், வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கோவில் சிலைகள், கலைப் பொருட்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கம்போடியா, இந்தோனேசியா, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன. கடத்தப்பட்ட பொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கிய பொருட்களை பல அருங்காட்சியகங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திடம் அளித்து வருகின்றன.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications