நெருங்கும் கெடு.. ஒரே நாளில் காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. ஆப்கனில் தொடரும் பதட்டம்
காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது,
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கியதை அடுத்து, அங்கு ஒவ்வொரு பகுதியாக தன்வசப்படுத்திய தலிபான்கள், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
இப்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஏர்போர்ட்டில் மட்டுமே அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன... அங்கிருந்து கொண்டே, அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஒப்பந்தம்
மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தங்கள் படைகள் முழுவதையும் திரும்பப்பெற்றுவிட வேண்டும் என்று தலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.. இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.. ஆனால், இந்த குறுகிய நாட்களுக்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமா என்பது தெரியவில்லை.

அறிக்கை
இதனிடையே அதிபர் ஜோ பிடன் பேசும்போது, "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் பணியில் இறுதிகட்டத்தில் இருக்கிறோம்.. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவது என்பது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் ஏர்போர்ட்டை பயன்படுத்த அனுமதிப்பது, நமது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை பொறுத்தே அமையும்.

தாலிபான்
தலிபான்களுடனான நமது அணுகுமுறையை ஜி7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐநா சபை ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களை மதிப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.. அதாவது தங்கள் பக்கம் அனைத்து விவகாரங்களிலும் சரியாகவே உள்ளோம் என்பதை அடிக்கடி பிடன் தன் பேச்சில் மறக்காமல் உணர்த்தியே வருகிறார்.

மீட்பு பணிகள்
இந்நிலையில், எத்தனை நபர்களை வெளியேற்றினோம் என்பது குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கையாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அதன்படி, இன்றும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் மீட்பு பணிகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் 19 ஆயிரம் பேர் ஒரே நாளில் வெளியேற்றியதாக கூறியுள்ளது.

தகவல்
அதாவது, 42 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 11 ஆயிரத்து 200 பேர் வெளியேறியதாகவும், கூட்டணி நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 800 விமானங்கள் மூலம் 7 ஆயிரத்து 800 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.. இதையடுத்து தொடர்ந்து வெளியேறும் பணியில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications