For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்வில் பலான நாவல் பற்றி கேள்வி கேட்ட யு.எஸ். பள்ளி: கொந்தளித்த பெற்றோர்

By Siva
Google Oneindia Tamil News

பெனிசில்வேனியா: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் பலான நாவலான ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரேவில் வரும் வார்த்தைகள் புதிர் தேர்வாக கேட்கப்பட்டது பெற்றோர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள மானெசன் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிர் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பால் உணர்வுகளைத் தூண்டும் பலான நாவலான ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரேவில் வரும் வார்த்தைகளை கேட்டுள்ளனர்.

US school gives Fifty Shades puzzle to students, parents outraged

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து 8ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ஜான் கார்டர் கூறுகையில்,

ஆசிரியர் தான் இந்த புதிரை அளித்துள்ளார். 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தகைய புதிரை அளிப்பது சரி அல்ல. இது பற்றி பேச பள்ளி தலைமை ஆசிரியரை அணுக முயன்றும் முடியவில்லை என்றார்.

ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள படம் நாளை ரிலீஸாக உள்ளது.

English summary
Parents of a school in Pennysylvania are outraged after a teacher gave Fifty Shades of Grey puzzle to students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X