ஹெச்-1பி விசா வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா.. வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி
அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க குடியுரிமை சேவை துறை அறிக்கை கூறுகிறது.
வாஷிங்டன்: புதிய ஹெச்-1பி விசா வழங்கும் பணியை அமெரிக்க குடியுரிமை சேவை துறை, சுமார் 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
ஹெச்-1பி விசா மூலமாக வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த ஐ.டி ஊழியர்களே அதிகம்.

வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்க குடிமக்களின் பணியிடத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். எனவே, ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ட்ரம்ப் அரசு கொண்டுவந்தது. இந்த நிலையில்தான், அமெரிக்க குடியுரிமை சேவை துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. அநேகமாக இது 6 மாத காலம் வரை நீளலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே பெண்டிங்கிலுள்ள விண்ணப்பங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறைக்காக புதிய விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹெச்-1பி விண்ணப்பங்கள் வாங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது வெளிநாட்டு பணியாளர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications