For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகுபலி போல... 2 வயது மகனை கையில் பிடித்து உயிரைக் காத்து நீரில் மூழ்கி இறந்த தாய்!

Google Oneindia Tamil News

சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி் பலியானார். அவரது மகன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர் 35 வயதான செல்சி ரஸ்ஸல். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போவல் ஏரியில் உள்ள சுற்றுலாப் படகு இல்லத்திற்கு சென்றிருந்தார் செல்சி. அங்கு படகு இல்லம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவரது 2 வயது மகன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டான்.

US woman dies after saving her 2 year old son above water

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்சி உடனடியாக தண்ணீரில் குதித்தார். தனது மகனை கைகளால் தூக்கிய அவர் தண்ணீருக்குள் தத்தளித்தார். ஆனாலும் அவரது கை மகனை விடவில்லை. தூக்கி உயர்த்திப் பிடித்தபடி 5 நிமிடம் போராடினார். அதற்குள் உறவினர் ஒருவர் ஓடி வந்து குழந்தையைப் பத்திரமாக வாங்கி படகுக்குள் கொண்டு வந்து விட்டார். ஆனால் அதற்குள் செல்சி மயக்கமாகி விட்டார்.

அவரை உடனடியாக மீட்ட மீட்புப் படையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அவர் மீட்ட அவரது 2 வயதுக் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மகனை மீட்கப் போய் உயிரை விட்ட செல்சி ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் மாரத்தான் ஓட்டக்காரரும் ஆவார்.

English summary
An US woman died after saving her 2 year old son from drowning in a lake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X