மத வெறி... இந்தியரை ரயில் முன்பு தள்ளிவிட்ட யு.எஸ். பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் மத துவேஷத்தால் சுனந்தோ சென் என்ற இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுனந்தோ சென்(46) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள க்வீன்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகம் அருகே சொந்தமாக அச்சகம் வைத்து நடந்தி வந்தார். பெற்றோரை இழந்த அவர் திருமணமாகாதவர். அவர் க்வீன்ஸ் பகுதியில் சிறிய அபார்ட்மென்ட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி அவர் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது ரயில் வரும்போது எரிகா மெனன்டெஸ்(33) என்ற அமெரிக்க பெண் அவரை ரயிலில் தள்ளிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சென் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் எரிகாவை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது இந்துக்களும், முஸ்லீம்களும் பிடிக்காததால் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். 9/11 தாக்குதலுக்கு பிறகு இந்துக்களையும், முஸ்லீம்களையும் காயப்படுத்த விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த க்வீன்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி கிரகரி லசாக் எரிகாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications