கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது- உலக சுகாதார நிறுவனம் வார்னிங்
ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார்.
கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின் மருந்துகள் சோதனை ஓட்டத்தில் 95 சதவீதம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ராஸ் கூறுகையில் தடுப்பூசி என்பது தற்போதுள்ள மருந்துகளை பூர்த்தி செய்வதற்குத்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இது மாற்று மருந்து இல்லை.
தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியாது. தடுப்பூசி முதலில் சில கட்டுப்பாடுகளுடன்தான் பயன்படுத்த முடியும். முதலில் சுகாதாரத் துறை ஊழியர்கள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயன்படுத்தப்படும்.
இதனால் பாதிப்பும், இறப்பு விகிதமும் குறையும். ஆனால் அதே சமயம் இதுவே கொரோனா பரவுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே கொரோனா குறித்து இன்னும் சோதனைகளை தொடர வேண்டும். தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம் என டெட்டராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களின்படி சனிக்கிழமை வரை 6.60 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இது மிகவும் அதிகமாகும். அது போல் கடந்த வெள்ளிக்கிழமை 6.45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications