மலேசியாவுக்குள் நுழைய தடை.. சென்னை திரும்பினார் வைகோ!
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று இரவு 11.45 மணி அளவில் வைகோ சென்னை திரும்பினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் தம்மை கைது செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வைகோ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வைகோவை கைது செய்ய உத்தரவிட்டது சென்னை எழும்பூர் நீதிமன்றம். அதேநேரத்தில் வைகோவுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் முன்வந்தது.

ஜாமீனில் விடுதலை
ஆனால் வைகோ இதை நிராகரித்து சிறைக்குப் போனார். பின்னர் மதிமுக நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியே வந்தார் வைகோ. இதனைத் தொடர்ந்து மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது.

மலேசியா தடை
வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி தங்களது நாட்டில் நுழைய வைகோவுக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மலேசிய அரசு கூறியுள்ளது.

பாஸ்போர்ட் பறிமுதல்
வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது மலேசியா. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இரவு 11.45 மணி அளவில் சென்னை வந்தடைந்தார் வைகோ.

கேபி, சீமான்
மலேசியாவில் இருந்துதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச செயற்பாட்டாளர் கேபி என்ற குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே கனடா நாட்டில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications