போப்பாண்டவரின் பேச்சை அமெரிக்கா ஒட்டுக் கேட்கவில்லை: வாடிகன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., உலக தலைவர்களின் தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் வாடிகனில் உள்ள போப்பாண்டவரின் தொலைபேசி பேச்சும் ஓட்டுக் கேட்கப் பட்டதாக இத்தாலி நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், அது தொடர்பாக விவாதிக்கப் படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இத்தகவலை மறுத்தது அமெரிக்க உளவு நிறுவனம். இந்நிலையில், இதுகுறித்து வாடிகன் செய்தித்தொடர்பாளர் வானே வினீஸ் கூறியதாவது, ‘அச்செய்தியில் உண்மை இல்லை. வாடிகன் புனிதமான இடம். ஆகவே அங்கு ஒட்டு கேட்பு எதுவும் நடக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஐ.நா.வின் தகவல் தொடர்புகளையும் ஒட்டு கேட்கவில்லை என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications