வெனிசுலாவில் துப்பாக்கி ஏந்திய மர்மகும்பல் தாக்குதல்.... அபார்ட்மென்டில் இருந்த 11 பேர் பலி
கராகஸ்: வெனிசுலா நாட்டில் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து 11 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டின் டிரிஜுல்லா மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. பின்னர் அங்குள்ள வீடுகளில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்த அந்த மர்ம கும்பல், அவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 13 வயதிலிருந்து 19 வயதிற்குட்பட்டவர்கள் 3 பேர் மற்றும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது இருச்சக்கர வாகனங்கள் மற்றும் காரில் ஏறி தப்பிச் சென்றது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பிச் சென்ற மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தெற்கு வெனிசூலாவில், 17 சுங்க பணியாளர்கள் இதே பாணியில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications