தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் சுட்டுக்கொலை... டிவி-யில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி
விர்ஜினியா: அமெரிக்காவில் பெண் செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போதே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணம் ரோனோகி என்ற இடத்தில் டபிள்யூ.டி.பி.ஜே. என்ற தொலைக்காட்சி சேனல் அலுவலகம் உள்ளது.

அந்த சேனலின் 24 வயதான பெண் செய்தியாளர் அலிசன் பார்க்கர், ஒளிப்பதிவாளர் ஆடம் வார்டு ஆகியோர் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ஒரு செய்தியின் நேரடி ஒளிபரப்புக்காக சென்றனர். அங்கு வந்த பொதுமக்களிடம் மைக்கை நீட்டி, பேட்டி கண்டனர்.
அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாகியால் சுட்டார். 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டது.
துப்பாக்கி சப்தத்தை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். புன்னகைத்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் அலறியபடியே கீழே சாயும் காட்சியும் தெரிந்தது.
கேமராவும் கீழே சாய்ந்தது. இந்த துப்பாக்கி சூட்டில், பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் பலியாகினர்.












Click it and Unblock the Notifications