செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை நிறுத்துகிறது வால்மார்ட்
வாஷிங்டன்: அமெரி்க்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனம் தனது விற்பனையகங்களில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஏஆர் 15 உள்ளிட்ட செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை இனிமேல் வால்மார்ட் விற்காதாம். அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிச் சூட்டுப் பின்னணியில் இந்த முடிவை எடுத்துள்ளது வால்மார்ட்.
அதேசமயம், இந்த வகைத் துப்பாக்கிகளுக்கு கிராக்கி குறைந்து விட்டதால்தான் இந்த முடிவை வால்மார்ட் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வால்மார்ட் மறுத்துள்ளது.

விற்க மாட்டோம்...
இதுகுறித்து வால்மார்ட் செய்தித் தொடர்பாளர் கோரி லுன்ட்பர்க் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் இதை வாங்குகிறார்களோ இல்லையோ அது பிரச்சினை இல்லை. நாங்கள் விற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம்' என்றார்.

3ல் ஒரு பங்குக்கும் குறைவு...
அமெரிக்காவில் உள்ள 4500 வால்மார்ட் கடைகளில் இந்த வகை துப்பாக்கிகள் தற்போது 3ல் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எடை குறைவானது...
ஏஆர் 15 ரக துப்பாக்கிகள் மிகவும் அபாயகரமானவை, புகழ் பெற்றதும் கூட. எடைக் குறைவானது. நம்பகமானது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

ராணுவத்தினருக்காக...
இதை முதலில் அமெரிக்க ராணுவத்தினருக்காகவே தயாரித்தனர். ஆனால் இன்று அமெரிக்கர்கள் பலரி்டமும் இது புழங்கி வருகிறது.

துப்பாக்கிச் சூடு...
சமீபத்தில் கனக்டிகட் மாகாணத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் துப்பாக்கி் சூடு நடந்தது. அதேபோல கொலராடோவில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது. முதல் சம்பவத்தில் 26 பேரும், 2வது சம்பவத்தில் 12 பேரும் உயிரழந்தனர்.

சர்ச்சைகள்...
இந்த செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கிகள் குறித்து பெரும் சர்ச்சையும், விவாதங்களும் எழுப்பியது. இதுபோன்ற துப்பாக்கிகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சுலபமாக வாங்க முடிந்தது...
மேலும் கொலையாளர்கள் இதை சர்வ சாதாரணாக வாங்க முடிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த சம்பவங்களுக்கும் தங்களது முடிவுக்கும் தொடர்பில்லை என்று வால்மார்ட் கூறியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications