அமெரிக்க ஷாப்பிங் மாலில் 5 பேர் சுட்டுக் கொலை.. தப்பியோடிய 20 வயது கொலையாளி கைது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க வணிக வளாகத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ளது கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம். கடந்த வெள்ளியன்று இரவு இந்த வளாகத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.

Washington State gun attack suspect in custody

இந்த தாக்குதலில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடி தலைமறைவானார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அந்த சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளதாக வாஷிங்டன் போலீசார் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். குற்றவாளியின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபரின் வயது 20 என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதற்கு பின்னணியில் தீவிரவாத செயல் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் 97 கி.மீ., தொலைவில் அந்த நபரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+