"பின்னணியில் யார்!" காலிஸ்தானி கொலை விவகாரம்.. மீண்டும் உள்ளே வரும் ட்ரூடோ! இந்தியா குறித்து பரபர
ஒட்டாவா: அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.
பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அங்கே இதுபோன்ற பிரிவினைவாதிகள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள். சிலர் அங்கிருந்தபடி இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களும் திட்டமிடுவதாகப் புகார்கள் உள்ளன.
கொல்ல சதி: இதற்கிடையே அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர், இவரைக் கொல்ல சதி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாட்டில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் குறித்துக் கூறியுள்ள தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஹர்தீப் சிங் கொலை விசாரணையில் இந்தியா உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ பேச்சு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நாங்கள் தொடக்கத்தில் இருந்து இதைத்தான் சொல்லி வருகிறோம். இப்போது அமெரிக்காவின் செய்தியும் அதையேதான் காட்டுகிறது, இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. இந்திய அரசு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவ வேண்டும்" என்றார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலியும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை விவகாரம் குறித்துப் பேசியிருந்தார். அதாவது நடந்து வரும் கொலை விசாரணையில் இந்தியா மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்தியா இந்த விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்பதையே கனடா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹர்தீப் சிங்: கடந்த ஜூன் மாதம் கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா என்ற பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டின் முன்பே அடையாளம் தெரியாத நபர் அவரை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. இந்த கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ட்ரூடோ கூறியிருந்தார். மேலும், இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த இந்தியா, இது குறித்து ட்ரூடோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், ஆதாரங்களை வெளியிட மறுத்த கனடா, தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி மட்டுமே வருகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications