ஈரான் மீது சர்ப்ரைஸ் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. திடீர் அட்டாக்கில் வெற்றிபெற்றது யார்?
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் என்ன நடந்தது. இரண்டு தரப்பும் சொல்வது என்ன என்று இங்கே பார்க்கலாம்.

இஸ்ரேல் தரப்பு வாதம்:
1. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
2. ஈரான் மீது மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
3. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
4. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
5. இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
6. முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
7. முக்கியமாக ஈரானிய ராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை தயாரிப்பு நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் மற்ற பைட்டர் உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலைமை மோசமாகி உள்ளது
ஈரான் வாதம்:
1. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
2. இஸ்ரேல் விமானங்கள் உள்ளே வந்தாலும் அவர்களின் குண்டுகளை ஈரானின் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்துள்ளன.
3. ஈரானின் போர் விமானங்கள் உடனே வானிற்கு வந்ததால் இஸ்ரேல் விமானங்கள் வெளியேறிவிட்டனர்.
4. இதனால் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.
5. இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களை நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஆனால் அவை பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை.
6. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7. இஸ்ரேலிய தாக்குதல்கள் Ilam, Khuzestan மற்றும் Tehran மாகாணங்களில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து, குறைந்த அளவு சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்து உள்ளது. ஈரானின் ரேடார் அமைப்புகள் முதலில் F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் மூலம் தாக்கப்பட்டது. . ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
வெற்றி யாருக்கு?: இரண்டு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களை சொல்வதால் இந்த மோதலில் இதுவரை யார் வென்றது என்பது தெளிவாக வெளியாகவில்லை.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications