"இந்தியர்கள் வேண்டாம்.. வெளியே போங்க.." கனடா விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்.. என்னதான் பிரச்சினை
ஒட்டாவா: கனடாவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு எதிராக சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

கல்லூரி படிப்பை மேற்கொள்ளவும், வேலை செய்யவும் வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றாகக் கனடா இருக்கிறது.
வெளிநாட்டவர்: கனடாவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து கனடா செல்வோரின் எண்ணிக்கை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இத்தனை நாட்களாகக் கனடாவின் வெளியுறவுக் கொள்கையும் வெளிநாட்டு மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இருந்தது. இதனால் அங்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
"காலிஸ்தானி" விவகாரம்.. 3 இந்தியர்களை கைது செய்த கனடா போலீஸ்! இரண்டே வரியில் ஜெய்சங்கர் நறுக் பதில்
குறிப்பாக 2013க்கு பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.. 2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 32,828இல் இருந்து 139,715ஆக உயர்ந்துள்ளது.. 10 ஆண்டுகளில் இது 326% அதிகமாகும்.. அதேபோல கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 62,223ஆக இருந்த நிலையில், 2021இல் அது 4,00,521ஆக உயர்ந்துள்ளது.. இது சுமார் 544% அதிகமாகும்.
இந்தியர்கள்: இந்தியா உட்படச் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பல விதங்களில் கனடா பொருளாதாரத்திற்கு உதவியே இருக்கிறது.. அதேநேரம் இது கனடாவில் எதிர்ப்பையும் கிளப்பியது. இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கனடா நாட்டவர்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதத் தொடங்கினர். இதனால் ஒரு சில இடங்களில் சமீப காலமாகவே எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.
கட்டுப்பாடுகள்: அதன்படி கனடாவின் மிகச்சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வர்ட் தீவு வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான பெர்மிட்களை 25% குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. புதிதாக வருவோருக்கு மட்டும் கட்டுப்பாடுகள் என்று இல்லாமல்.. ஏற்கனவே அங்கு இருக்கும் வெளிநாட்டவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அந்த கனடா மாகாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் தொடக்கம் தான்.. வரும் காலத்தில் மேலும் பல மாகாணங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சரி, கனடா நிறுவனம் எதற்காக இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.. இதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம்.. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.
காரணங்கள்: ஹெல்த்கேர் செலவுகள் அதிகரிப்பதே இதன் முதல் காரணமாகும். அதாவது கனடாவில் உள்ள இந்த பிரின்ஸ் எட்வர்ட் மாகாணத்தின் சட்டப்படி ஒட்டுமொத்தமாக மாகாணத்தில் ஆகும் மருத்துவச் செலவுகள் வரி உள்ளிட்டவை மூலம் மக்களிடம் இருந்தே வசூலிக்கப்படும். வெளிநாட்டவர் அதிகம் வருவதால் அது மருத்துவ கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறதாம்.. மேலும், காத்திருப்பு காலமும் அதிக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அரசின் ஹெல்த்கேர் கீழ் ஆப்ரேஷன் செய்வோர் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பது அங்குள்ள வீடுகளின் விலை மின்னல் வேகத்தில் எகிறக் காரணமாக இருக்கிறது. இதனால் கனடாவில் வசிக்கும் மிடில் கிளாஸ் மக்களால் வீடுகளைச் சொந்தமாக வாங்க முடிவதில்லையாம்.. வாடகையின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதாம்.. இதனால் அங்குள்ள மிடில் கிளாஸ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
எதிர்ப்பு: இவை எல்லாம் சேர்ந்து தான் கனடா மக்களை வெளிநாட்டினருக்கு எதிராகத் திருப்பி உள்ளது. இப்போது சிறிய மாகாணத்தில் தான் கட்டுப்பாடுகள் எடுத்து வரப்பட்டுள்ளது என்ற போதிலும் வரும் காலத்தில் இது அதிகரிக்கலாம் என அங்குள்ள இந்தியர்கள் அஞ்சுகிறார்கள்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications