என்.எஸ்.ஜி. விவகாரம்: சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: அணுசக்தி மூலப் பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.
48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவி காலத்துக்குள் உறுப்பினராகிவிட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்.
அந்நாட்டின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு மேற்கொள்வார்கள் எனத் தெரியாது. ஆகையால்தான் இந்தியா படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.

ஜெய்சங்கர் பயணம்
என்.எஸ்.ஜி.யின் நாளைய கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சியோல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஷாங்காய் மாநாடு
இதனிடையே சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு தாஷ்கண்ட்டில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.

ஜின்பிங்கை சந்திக்கும் மோடி
இம்மாநாட்டின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனாவின் ஆதரவை பிரதமர் மோடி கோரினார்.

சீனாவின் நிலைப்பாடு
சீனாவைப் பொறுத்தவரையில் என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேருவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்தியாவை உறுப்பினராக்கினால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தி வருகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜியில் சேரக் கூடாது என்றும் சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications