போர் வேண்டாம்னு நினைச்சா ராணுவத்தை வாபஸ் வாங்கிடுங்க... இந்தியாவை மீண்டும் மிரட்டும் சீனா
இந்திய சீன எல்லையில் போர் வேண்டாம் என்றால், இந்தியா ராணுவ வீரர்களை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங்: சிக்கிம் பகுதியில் போர் ஆபத்து நீங்கவேண்டும் என்றால் இந்தியா உடனடியாக ராணுவ வீரர்களை வாபஸ் பெறவேண்டும் என சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளில் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது. இதில் சீன ராணுவம் திடீரென சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய ராணுவ வீரர்கள், சீனாவின் சாலை அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்த முயன்றனர். அதில் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் நடந்தது.
பின்னர் இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் சிக்கிம் பகுதியை போர் மேகம் சூழந்தது.
இந்தியா, பூடான்
இந்த நிலையில், 'இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும்' என இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. 'சீன ராணுவம் அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது, வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும்' என இந்தியா அஞ்சுகிறது. சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக பூடானும் கருத்துத் தெரிவித்தது.
இந்திய பத்திரிகையாளர்கள்
இந்த நிலையில் சீன அரசு, இந்திய பத்திரிகையாளர்களை சீனாவுக்கு அழைத்தது. பெய்ஜிங் அருகேயுள்ள ஹூரைராவு ராணுவ பயிற்சி முகாமுக்கு இந்திய பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற சீன அரசு, அங்கு அந்நாட்டு ராணுவ பலத்தை காட்டும்வகையில் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி லி கூறுகையில்," இந்திய ராணுவத்தினர்தான் சீன எல்லையை ஆக்கிரமிப்பு செய்தனர். சீன சிப்பாய்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று சொல்லுங்கள்.
தீர்வு இருக்கிறது
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு போர் வீரர். பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்காக என்னால் இயன்ற சிறப்பானதை செய்ய முயற்சிப்பேன். எங்களிடம் தீர்வு இருக்கிறது. அத்தைமட்டுமே நிறைவேற்றுவோம் என்ற உறுதியான முடிவில் இருக்கிறோம்.
வாபஸ் வாங்குங்கள்
எனவே போர் ஆபத்து நீங்க, போரைத்தவிர்க்க இந்திய படையினர் திரும்பப்பெற வேண்டும். இங்கே உங்கள் முன்பு நாங்கள் செய்து காட்டிய ராணுவ நிகழ்வுகளுக்கும், டோக்லாம் எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்று தெரிவித்தார்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக் -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!











Click it and Unblock the Notifications