போர் வேண்டாம்னு நினைச்சா ராணுவத்தை வாபஸ் வாங்கிடுங்க... இந்தியாவை மீண்டும் மிரட்டும் சீனா
இந்திய சீன எல்லையில் போர் வேண்டாம் என்றால், இந்தியா ராணுவ வீரர்களை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங்: சிக்கிம் பகுதியில் போர் ஆபத்து நீங்கவேண்டும் என்றால் இந்தியா உடனடியாக ராணுவ வீரர்களை வாபஸ் பெறவேண்டும் என சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிகளில் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது. இதில் சீன ராணுவம் திடீரென சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய ராணுவ வீரர்கள், சீனாவின் சாலை அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்த முயன்றனர். அதில் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் நடந்தது.
பின்னர் இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் சிக்கிம் பகுதியை போர் மேகம் சூழந்தது.
இந்தியா, பூடான்
இந்த நிலையில், 'இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும்' என இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. 'சீன ராணுவம் அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது, வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும்' என இந்தியா அஞ்சுகிறது. சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக பூடானும் கருத்துத் தெரிவித்தது.
இந்திய பத்திரிகையாளர்கள்
இந்த நிலையில் சீன அரசு, இந்திய பத்திரிகையாளர்களை சீனாவுக்கு அழைத்தது. பெய்ஜிங் அருகேயுள்ள ஹூரைராவு ராணுவ பயிற்சி முகாமுக்கு இந்திய பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற சீன அரசு, அங்கு அந்நாட்டு ராணுவ பலத்தை காட்டும்வகையில் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி லி கூறுகையில்," இந்திய ராணுவத்தினர்தான் சீன எல்லையை ஆக்கிரமிப்பு செய்தனர். சீன சிப்பாய்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று சொல்லுங்கள்.
தீர்வு இருக்கிறது
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு போர் வீரர். பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்காக என்னால் இயன்ற சிறப்பானதை செய்ய முயற்சிப்பேன். எங்களிடம் தீர்வு இருக்கிறது. அத்தைமட்டுமே நிறைவேற்றுவோம் என்ற உறுதியான முடிவில் இருக்கிறோம்.
வாபஸ் வாங்குங்கள்
எனவே போர் ஆபத்து நீங்க, போரைத்தவிர்க்க இந்திய படையினர் திரும்பப்பெற வேண்டும். இங்கே உங்கள் முன்பு நாங்கள் செய்து காட்டிய ராணுவ நிகழ்வுகளுக்கும், டோக்லாம் எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்று தெரிவித்தார்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications