விமானத்தில் பணிப்பெண்ணை தாறுமாறாய் கடித்த 87 வயது பாட்டி கைது
Subscribe to Oneindia Tamil
கர்டா: ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரிலிருந்து கனடாவின் டொரன்டோவுக்கு 200 பயணிகளுடன் சென்ற ஏர் கனடா விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த 87 வயதான பாட்டி விமான பணிப்பெண்ணை கடித்து வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அயர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டியின் மோசமான இந்த செய்கையை அடுத்து அவரை பிடித்து வைத்துள்ளனர் விமான பணியாளர்கள்.
விமானம் அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷன்னோன் விமான நிலையத்திற்கு சென்றவுடன், அங்கிருந்த விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த அயர்லாந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications