For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துடைப்பக்கட்டைப் பிஞ்சுடும்... கத்தியைக் காட்டிய திருடனை அடித்து விரட்டிய பெண்

Google Oneindia Tamil News

சாரஜெவோ: முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரப் பெண் பற்றிய கதையைக் கேட்டிருப்பீர்கள். அந்தவகையில் வல்லவனுக்கு புக்கும் ஆயுதம் என, கத்தியைக் காட்டி மிரட்டிய திருடனை கையில் கிடைத்த துடைப்பத்தால் அடித்து ஓட விட்டிருக்கிறார் பெண் ஒருவர்.

பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் சிறியகடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார் லிசினா என்ற பெண். சமீபத்தில் அவரது கடைக்குள் திடீரென புகுந்த திருடன் ஒருவன் கத்தியைக் காட்டி அப்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளான்.

ஆனால், சிறிதும் கலங்காத அப்பெண், கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து திருடனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த திருடன் வலி பொறுக்க முடியாமல் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டானாம்.

எனினும் நடந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்ப்டையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அவ்வப்போதும் சாரஜெவோவில் சிறிய கடைகளை குறிவைத்து திருடர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு அங்குள்ள பாதுகாப்பு குறைபாடே காரணம் எனக் கூறப்படுகிறது.

English summary
A brave saleswoman chased a knife-waving robber out of her shop with a broom, local media reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X