சவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்.. அனுமதி வழங்கினார் மன்னர் சல்மான்!
சவுதி அரேபியாவில் பெண்கள் இனி கார் ஓட்டுவதற்கான அனுமதியை மன்னர் சல்மான் வழங்கியுள்ளார்.
ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் இனி கார் ஓட்டுவதற்கான அனுமதியை மன்னர் சல்மான் வழங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. உலகிலேயே பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்காமல் இருந்த ஒரே நாடு சவுதி அரேபியா.
இதனை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தடையை மீறி வாகனம் ஓட்டிய பெண்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

பெண்கள் கார் ஓட்டலாம்
இந்நிலையில் நேற்றிரவு சவுதி மன்னர் சல்மான் பெண்கள் இனி வாகனங்கள் ஓட்டலாம் என அனுமதி வழங்கினார். பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார்.

30 நாள் அவகாசம்
அந்த ஆணையைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்கவும் இந்த உத்தரவை நடைமுறைபடுத்தவும் அதிகாரிகளுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் வாகனங்கள் ஓட்டும்போது பாதுகாவலர் தேவையில்லை என்றும் மன்னரின் உத்தரவில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

சவுதி பெண்கள் மகிழ்ச்சி
மேலும் லைசென்ஸ் பெறவும் பெண்களுக்கு சட்ட பாதுகாவலர் தேவையில்லை என்றும் மன்னர் தெரிவித்துள்ளார். மன்னரின் இந்த அனுமதியால் சவுதி பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலக நாடுகள் வரவேற்பு
மதகுருமார்களை சம்மதிக்க வைத்து மன்னர் சல்மான் அடிப்படைவாத ராஜ்ஜியத்தில் இந்த சீர்த்திருத்ததை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் சவுதி அரேபிய மன்னரின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications