அமெரிக்காவில் பெண்ணைக் குத்திக் கொன்று தடுக்க வந்த போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற நபர்
லூசியானா: அமெரிக்காவில் ஒருவர் மூன்று பெண்களை கத்தியால் குத்தினார். அதில் ஒருவர் பலியானார். இதை தடுக்க வந்த போலீஸ்காரர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள சன்செட் நகரில் ஹாரிசன் லீ ரைலீ ஜூனியர்(35) என்பவர் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் ஆன் தெருவில் கிராண்ட் கோட்டோவின் இடைக்கால மேயரான ஷாட்டரல் ஜான்சனின் சகோதரிகளான ஷமீகா ஜான்சன்(40), சுர்லே ஜான்சன்(34) ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் 40 வயதான ஷமீகா பலியானார்.

இதை பார்த்து அதை தடுக்க வந்த போலீஸ்காரர் ஹென்றி நெல்சனை ஹாரிசன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். மேலும் அங்கிருந்த தனது மனைவி கோர்ட்னி ஜோலிவெட்டையும் கத்தியால் குத்திவிட்டார் காரில் தப்பியோடினார்.
காரை அருகில் உள்ள கடைக்குள் விட்டார். கடைக்குள் இருந்து வெளியே வருமாறு போலீசார் கூறியும் அவர் வரவில்லை. போலீசார் கடைக்குள் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு நீல்சனை போலீசார் உயிருடன் கைது செய்தனர்.
நீல்சன் போதைப் பொருள் உட்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சன்செட் நகர் பதட்டமாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications