அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியாவில் அதிக பாதிப்பு.. 52,123 பேருக்கு கொரோனா
ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5,999 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் தொடங்கி கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 16,812,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் 6,62,095 பேர் இதுவரை மரணம்
அடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 43,23,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகிலேயே அதிகபட்சமாக
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,48,640 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 59,629 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 24,83,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 88,539 பேர் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 40,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 52,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியா அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications