"சூடாகும் பூமி.." இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்ட வெப்பம்.. சர்வதேச ஆய்வாளர்கள் பகீர்
பாரீஸ்: மனித வரலாற்றிலேயே ஜூன் மாதம் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சம் தொட்டிருந்தது.
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் வெப்பம் 100 டிகிரியை அசால்டாக தாண்டியது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவே சிரமப்பட்டனர். கோடை வெயில் முடிந்தாலும் இன்னும் பல இடங்களில் வெப்பம் உச்சத்திலேயே இருக்கிறது.
வெப்பம் உச்சம்: இதற்கிடையே மனித வரலாற்றில் ஜூன் மாதம் இதுவரை இல்லாத வகையில் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில், தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து C3S அமைப்பின் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் கூறுகையில், "இதுவரை இல்லாத வகையில் உலகம் அதன் வெப்பமான ஜூன் முதல் வாரத்தில் பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது, வெப்பம் 0.1 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை ஜூன் வாரம் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது இல்லை. இந்தாண்டு ஜூன் தொடக்கத்தில் உலகளவில் மேற்பரப்புக் காற்றின் வெப்பம் என்பது இதுவரை பதிவானதில் கணிசமாக அதிகமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
தலைவலி: புவி வெப்ப மயமாதல் என்பது மிக பெரிய தலைவலியாக மாறி வருகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் பெருங்கடல்கள் இதுவரை இல்லாத வகையில் வெப்பமாக இருந்ததாக கோப்பர்நிக்கஸ் கிளைமேட் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜூன் மாத தொடக்கத்தில், பூமியின் வெப்பம் 1.5C (34.7 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருந்துள்ளது. அதாவது 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் வைத்த இலக்கை இது மீறியுள்ளது.
கடந்த ஜூன் 7-11 வரை பூமியின் சராசரி வெப்பம் 1.5C அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஜூன் 9ஆம் தேதி இது 1.69C வரை அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு வெப்பம் அதிகரிப்பது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாகவே குளிர் மற்றும் மழைக் காலங்களில் பல முறை வெப்பம் இதைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
எல் நினோ: பூமியின் வெப்ப நிலை ஒவ்வொரு டிகிரி அதிகரித்தாலும் கூட அது பருவநிலை மாற்றத்தில் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே இப்போது எல் நினோ நிகழ்வும் ஏற்பட்டுள்ள நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எல் நினோ நிகழ்வின் போது, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் சராசரியை விட அதிகமாக இருக்கும். கடந்த 2018-19 காலகட்டத்தில் கடைசியாக இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. இது சராசரியாக ஒவ்வொரு 2-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வெப்பமான காலங்களும் எல் நினோ காலத்திலேயே பதிவு செய்யப்பட்டவையாகும். இதனால் எல் நினோ நீட்டிக்கும் வகை இந்தாண்டும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications