Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செயற்கை இதயத்துடன் 100 நாட்களுக்கும் மேல் வாழ்ந்த நோயாளி! சாதனை படைத்த மருத்துவர்கள்

Subscribe to Oneindia Tamil

கான்பெர்ரா: இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை இதயத்தை பொருத்தி ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். செயற்கை இதயம் உலகின் பல நாடுகளில் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் 100 நாட்களுக்கும் மேல் வாழ்ந்தது கிடையாது.

ஆஸ்திரேலியா மருத்துவர்கள் செயற்கை இதயம் பொறுத்தப்பட்ட நோயாளியை 100 நாட்களுக்கும் மேல் வாழ வைத்திருக்கிறார்கள். மட்டுமல்லாது நோயாளியை மருத்துவமனையிலிருந்து செயற்கை இதயத்துடன் டிஸ்சார்ஜும் செய்திருக்கிறார்கள்.

international heart Australia

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயது நபருக்கு கடந்த நவம்பர் மாதம் இதயம் திடீரென செயலிழந்தது. உடனடியாக அவர் சிட்னியில் உள்ள 'புனித வின்சென்ட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு BiVACOR Total Artificial Heart என்ற உயர் தொழில்நுட்ப செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. சுமார் 650 கிராம் எடை கொண்ட செயற்கை இதயம் டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அங்கம் போல, இயற்கையான இதயதம் போல இது இருக்கும்.

இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும். இதற்காக சிறிய பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. இதனை ரீசார்ஜ் செய்ய முடியும். 12 வயது சிறுவர்களுக்கு கூட பொருந்தும் அளவுக்கு இந்த செயற்கை இதயம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் ஏற்கெனவே இதுபோன்ற செயற்கை இதயம் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் 100 நாட்களுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருக்கிறார். எனவே மருத்துவர்கள் அவரை செயற்கை இதயத்துடன் டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். உலகிலேயே முதல் முறையாக இந்த செயற்கை இதயத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய முதல் நோயாளியாக இவர் அறியப்படுகிறார்.

இது குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கூறுகையில், "ஆஸ்திரேலிய உயிரியல் பொறியாளர் டேனியல் டிம்ஸ் என்பவர்தான் செயற்கை இதயத்தை கண்டுபிடித்தார். சிறுவயதிலிருந்தே அவருடைய தந்தையுடன் குழாய் மற்றும் நீர்ப்பம்புகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்த அனுபவத்தை இவர் பெற்றிருக்கிறார். இவரது தந்தையும் இதய பிரச்சனையால்தான் உயிரிழந்தார். எனவே, இதய பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற இந்த செயற்கை இதயத்தை கண்டுபிடித்திருக்கிறார்.

இனி வரும் காலங்களில் வயர்லெஸ் சார்ஜர் மூலம் இந்த இதயம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். எங்கள் நாட்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையும் இதே மருத்துவமனையில்தான் நடந்தது. இந்த மருத்துவமனையில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் நீண்ட நாட்கள் வாழ வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது அவருக்கு உறுப்பு தானம் மூலமாக மற்றொருவரின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த செயற்கை இதயத்தில் இன்னும் சில மேம்பாடுகள் செய்ய வேண்டியது இருக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், இது சாமானிய மக்களின் பயன்பாட்டுக்கு வர மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் எனவும் தெரிவித்திருக்கின்னறர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+