Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு தலையணை விலை ரூ. 45 லட்சமா.. விலையைக் கேட்டா தூக்கம் இல்லை.. மயக்கமே வருதே!

ரூ. 45 லட்சம் விலையில் உலகின் விலை உயர்ந்த தலையணையை கண்டுபிடித்துள்ளது நெதர்லாந்து நிறுவனம் ஒன்று.

Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டாம்: நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உகந்தது என தங்கம், வைரம் பதித்த தலையணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது நெதர்லாந்தைச் சேர்ந்த தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதன் விலையைக் கேட்டால் நிச்சயம் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது...

'மெத்தை வாங்கினேன்.. தூக்கத்தை வாங்கல..' இதுதான் இன்று நம்மில் பலரது முக்கியப் பிரச்சினை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாறிப் போன வாழ்க்கை முறைக்கு நாம் கொடுத்திருக்கும் பெரிய விலை தூக்கம். இரவில் சரியான நேரத்திற்கு நன்கு உறங்க முடியாமல் போவதால், பல வியாதிகள் தாமாகவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. சிகிச்சைக்கு மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் கூறும் முதல் அறிவுரை நன்றாகத் தூங்குங்கள் என்பதுதான்.

ஆனால் நிம்மதியாகத் தூங்க, தலையணைக்கு மட்டும் அரை கோடி ரூபாய் செலவாகும் என அதிர்ச்சித் தருகிறது நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று.

 45 லட்சம்

45 லட்சம்

நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட்டான திஜிஸ் வான் டெர் ஹில்ஸ்ட் (Thijs van der Hilst) என்பவரால் 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் வான் டெர் ஹில்ஸ்ட் என்ற தலையணை நிறுவனம். இது கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து, உலகின் விலை உயர்ந்த தலையணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் தலையணையின் விலை 57,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 45 லட்சம்.

15 வருட ஆராய்ச்சி

15 வருட ஆராய்ச்சி

இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அந்தத் தலையணையில் என்ன இருக்கிறது என நீங்கள் ஆச்சர்யப்படலாம். தூக்க நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என குழுவாகச் சேர்ந்து இந்தத் தலையணையைப் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். ஒரு மனிதனின் நிம்மதியான உறக்கத்திற்கு என்னென்ன தேவைப்படும் என பல்வேறு ஆய்வுகளை நடத்தி, இந்த தலையணையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வைரக்கற்கள்

வைரக்கற்கள்

ரோபோட்டிக் மில்லிங் மிஷினால் பஞ்சுகள் நிரப்பப்பட்டுள்ள இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 காரட் தங்க துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தலையணையை உருவாக்கியுள்ளனர். விலையுயர்ந்த இந்தத் தலையணையை வைத்துக் கொள்வதற்கு என பிரத்யேகமாகப் பெட்டி ஒன்றையும் தயாரித்துள்ளனர்.

இன்சோம்னியாவுக்கு நல்லது

இன்சோம்னியாவுக்கு நல்லது

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த தலையணை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் வான் டெர் ஹில்ஸ்ட் நிறுவனத்தினர். தற்போது இந்த தலையணை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.என்னதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஒரு தலையணையை இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

ரொம்ப காஸ்ட்லி பாஸ்

ரொம்ப காஸ்ட்லி பாஸ்

'நாங்களாம் கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்து, கண்ணில் தூக்கம் சொக்க வைக்குற உழைப்பாளிகள் சார்.. எங்களுக்கெல்லாம் இந்த தலையணை தேவையே இல்லை' என ஒரு தரப்பு இந்த செய்தியைப் பகிர்ந்து கமெண்ட் வெளியிட, மற்றொரு தரப்போ, 'இவ்வளவு காஸ்ட்லியா தலையணை வாங்கினால், அதை நிம்மதியாக தலைக்கு வைத்து தூங்க முடியுமா? நன்றாக ஆழ்ந்து உறங்கும்போது யாராவது உருவி விடுவார்களோ..என பயத்திலேயே நிம்மதியாக தூக்க முடியாதே..' என பிராக்டிகலாக பீல் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+