யாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்
சான் பிரான்சிஸ்கோ: யாஹூ நிறுவன சிஇஓ மரிஸா மேயர் நிறுவனத்தின் சிஓஓவான ஹென்ரிக் டி காஸ்ட்ரோவை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த மரிஸா மேயர் கடந்த 2012ம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹென்ரிக் டி காஸ்ட்ரோ என்பவரை யாஹூ நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாஹூ நிறுவனத்தில் சேர்ந்த காஸ்ட்ரோவுக்கு சிஓஓ பதவியை அளித்தார் மேயர். இந்நிலையில் காஸ்ட்ரோவுக்கும், மேயருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது.இதையடுத்து காஸ்ட்ரோவை மேயர் திடீர் என்று பணியில் இருந்து நீக்கிவிட்டார்.

பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு ஹென்ரிக் டி காஸ்ட்ரோ பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இரண்டு வரியில் எழுதப்பட்ட அறிக்கையை யாஹூ நேற்று மாலை சமர்பித்தது.
காஸ்ட்ரோவுக்கு இன்று தான் யாஹூவில் கடைசி நாள். அவருக்கு 20 மில்லியன் டாலர் பங்கு போனஸாக வழங்கப்படும் என்று யாஹூ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications