'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு
காத்மாண்டு: கடவுள் ராமர் நேபாளத்துக்கு சொந்தம் என்று பேசிய அந்நாட்டு (காபந்து) பிரதமர் ஷர்மா ஒலி தற்போது யோகாவும் தங்களுக்கே சொந்தம் என பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஏற்கனவே, எங்கள் நாட்டின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார்; இந்தியாவில் இப்போது இருக்கும் அயோத்தியில் பிறக்கவில்லை என கூறியிருந்தார்.
அதேபோல் சீதையும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில்தான் பிறந்தவர்; ஆகையால் ராமரும் சீதையும் தங்கள் நாட்டுக்கு சொந்தமானவர்கள் என கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது.

7-வது யோகா தினம்
இந்த நிலையில் 7-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. லடாக் பனிமலை தொடங்கி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.

பிரதமர் மோடி பேச்சு
மேலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தற்போதைய கொரோனாவுக்கு எதிரான போரில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது; கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் யோகா முக்கிய பங்களிப்பு செய்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நேபாளத்தில் உருவானதாம்
இதனிடையே நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி, யோகா உருவான போது இந்தியா ஒரு நாடாகவே இல்லை; இந்தியா என்பது அப்போது பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில்தான் யோகா உருவானது.

சர்வதேச அங்கீகாரம்
நேபாளத்தின் யோகாவை சர்வதேச அரங்கத்தில் முன்னிறுத்தி அங்கீகாரம் பெற தவறிவிட்டோம்; ஆனால் இந்திய பிரதமர் மோடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து இந்தியாவுக்கு உரியது என வலியுறுத்தி தற்போது அங்கீகாரமும் பெற்றுவிட்டார் என்றார். ஷர்மா ஒலியின் இப்பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications