“போர் நிறுத்தம்! ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை” - ஜெலன்ஸ்கி
கீவ்: ஈஸ்டர் திருநாளை ஒட்டி 30 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.
போர் நிறுத்தம் என்று ரஷ்யா சொல்கிறது. ஆனால் இன்னமும் சில பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு உண்மையல்ல என்று ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ரஷ்ய எல்லை பகுதிகளில் உள்ள குர்ஸ்க் மற்றும் பெல்கிரேட் பகுதியில் இன்னும் அர்டில்லரி (சிறிய ரக பீரங்கி) தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
எங்கள் கமாண்டர்-இன்-சீஃப்பின் அறிக்கைப்படி இன்னும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மாஸ்கோவிலிருந்து வரும் வார்த்தைகளில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை வைக்க மாட்டோம். அவர்களின் மோசடித்தனம் பற்றி எங்களுக்கு தெரியும் நாங்கள் அதற்கு பதிலளிக்க ரெடியாக இருக்கிறோம். ரஷ்யாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் உறுதியாக பதிலடி கொடுப்போம்.
உண்மையில் ரஷ்யா அமைதியை விரும்பினால், அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் ரஷ்யாவின் வார்த்தையில் உண்மையில்லை. ரஷ்ய டிரோன்கள் இன்னும் ஆக்டிவாகத்தான் இருக்கிறது" என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த போருக்கு காரணம் நேட்டோ படைதான். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து முயன்று வந்தது. எந்த நாடு நேட்டோவில் இணைகிறதோடு, அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படைகள் நிலை நிறுத்தப்படும். அப்படியெனில் உக்ரைனிலும் நேட்டோ படை நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். ரஷ்யாவும், அமெரிக்காவும் பாம்பும் கீரியுமாக இருக்கின்றன.
அப்படி இருக்கும்போது நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டால் அது சிக்கலைதான் ஏற்படுத்தும். எனவே நேட்டோவில் உக்ரைன் இணைய கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஜெலன்ஸ்கி இதனை கேட்கவில்லை. நேட்டோவில் இணைவதற்கான சில முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து போர் தொடங்கியது. இந்த போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று புதின் கூறியிருந்தார். வெறும் 3 மாதங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த போரை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுக்க திட்டமிட்டிருக்கிறதுட என்பது தனிக்கதை.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications