“போர் நிறுத்தம்! ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை” - ஜெலன்ஸ்கி

Subscribe to Oneindia Tamil

கீவ்: ஈஸ்டர் திருநாளை ஒட்டி 30 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.

போர் நிறுத்தம் என்று ரஷ்யா சொல்கிறது. ஆனால் இன்னமும் சில பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Ukraine Russia Zelenskyy

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு உண்மையல்ல என்று ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ரஷ்ய எல்லை பகுதிகளில் உள்ள குர்ஸ்க் மற்றும் பெல்கிரேட் பகுதியில் இன்னும் அர்டில்லரி (சிறிய ரக பீரங்கி) தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

எங்கள் கமாண்டர்-இன்-சீஃப்பின் அறிக்கைப்படி இன்னும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மாஸ்கோவிலிருந்து வரும் வார்த்தைகளில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை வைக்க மாட்டோம். அவர்களின் மோசடித்தனம் பற்றி எங்களுக்கு தெரியும் நாங்கள் அதற்கு பதிலளிக்க ரெடியாக இருக்கிறோம். ரஷ்யாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் உறுதியாக பதிலடி கொடுப்போம்.

உண்மையில் ரஷ்யா அமைதியை விரும்பினால், அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் ரஷ்யாவின் வார்த்தையில் உண்மையில்லை. ரஷ்ய டிரோன்கள் இன்னும் ஆக்டிவாகத்தான் இருக்கிறது" என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த போருக்கு காரணம் நேட்டோ படைதான். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து முயன்று வந்தது. எந்த நாடு நேட்டோவில் இணைகிறதோடு, அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படைகள் நிலை நிறுத்தப்படும். அப்படியெனில் உக்ரைனிலும் நேட்டோ படை நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். ரஷ்யாவும், அமெரிக்காவும் பாம்பும் கீரியுமாக இருக்கின்றன.

அப்படி இருக்கும்போது நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டால் அது சிக்கலைதான் ஏற்படுத்தும். எனவே நேட்டோவில் உக்ரைன் இணைய கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஜெலன்ஸ்கி இதனை கேட்கவில்லை. நேட்டோவில் இணைவதற்கான சில முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து போர் தொடங்கியது. இந்த போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று புதின் கூறியிருந்தார். வெறும் 3 மாதங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த போரை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுக்க திட்டமிட்டிருக்கிறதுட என்பது தனிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+