இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ஸ்ரீபெரும்புதூரில் 17 வயது சிறுவன் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (49). இவரது மகள் லட்சுமி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநலம் பாதிக்கப்பட்டவர்.

17 year old boy arrested in Sriperumbudur for rape young women

நேற்றைய தினம் கஸ்தூரியும் அவரது கணவரான மேகநாதன் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாய் கஸ்தூரி இடம் கூறியதை அடுத்து சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 17 வயது சிறுவனை கைது செய்த மகளிர் போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்பு 17 வயது சிறுவன் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+