அத்தி வரதர் விழா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்: கலெக்டர் எச்சரிக்கை
Recommended Video

காஞ்சிபுரம்: அத்தி வரதர் விழா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தி வரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 3லட்சம் பேர் குவிந்தனர். ஏகாதேசி மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று லட்சக்கணக்கான மக்கள் பல மணி நேரம் நின்று அத்தி வரதரை தரிசித்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது.

நேற்று வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அத்திவரதரை தரினம் செய்ய குவிந்த நிலையில் அவர்களிடம் போலீசார் கூட்டம் அதிகமாக இருப்பதால் நாளை வருமாறு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் ஏன் திருப்புி அனுப்புகிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா யாரையும் திரும்பி போகச்சொல்லவில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர்கூறுகையில், "கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி நிறுத்தி தரிசனம் செய்ய அனுமதித்து வருகிறோம்.
அத்தி வரதர் தரிசனத்துக்காக நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் அதை யாரும் நம்ப வேண்டாம். அத்தி வரதர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடிக்கை எடுக்கப்படும்.
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வருகிறோம். கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும், போதுமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications