காஞ்சிபுரத்தில் ஆச்சரியம்.. கலெக்டர் ஆபீஸ்ல வந்த சத்தம்.. கிட்ட போய் பார்த்த ஆபீசர்ஸ்.. நெகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே, உதவி மையங்கள் பல செயல்படும்.. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்படும் விதமாக உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, சமீப காலமாகவே, மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தது.
புகார்கள்: இந்த புகார்களின் பேரில், மாநகராட்சிக்கு சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்.. அவ்வகையில், நேற்றுமுன்தினம் தினம் 8 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜவ்வாது மலை கோசாலையிலும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை, காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலக பின்புறம் திடீரென சத்தம் கேட்கவும், அலுவலக ஊழியர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.. அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த நிறைமாத பசு, ஒன்று கன்று ஈன்றிருப்பது தெரியவந்தது... இதைப்பார்த்ததுமே, அங்கிருந்த அலுவலர்கள் கால்நடை மருத்துவமனையின் உதவியை நாடினார்கள்..
முதலுதவி: அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ், டாக்டருடன் அங்கு வந்து நின்றது.. பின்னர், கால்நடைக்கு தேவையான முதல் உதவிகளை, டாக்டர்கள் செய்தனர். ஆனால், முதலுதவி செய்வதற்காக, டாக்டர்கள் அருகில் சென்றபோது, அந்த பசு அவர்களை தன்னிடம் நெருங்கவிடவில்லையாம்.. அதனால் தயங்கியே நின்று கொண்டிருந்ததாம்.
அதற்கு பிறகு, டாக்டர்கள், அந்த கன்றுக்குட்டியை, பசு மாட்டின் அருகில் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கு பிறகு, பசுமாட்டுக்கு முதலுதவி செய்தார்களாம்.. முதலுதவிக்கு பிறகு, கால்நடை மருத்துவர்களால் அந்த பசுமாடு நலமுடன் எழுந்து நின்றது.
நெகிழ்ச்சி: இறுதியில், அந்த பசுமாட்டின் உரிமையாளர் யார் என்பதை அறிந்து, இனிமேல் இதுபோன்ற நிலைமையில், பசுமாட்டை தனியே விட வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு சென்றனர்.. பசுமாடு கன்றுக்குட்டியை ஈன்று, உடல்நலம் குன்றியதுமே, பேரிடர் மேலாண்மை துறை அலுவலக ஊழியர்கள், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, பேருதவி புரிந்துள்ளனர். கால்நடையின் அவசர தேவையை உணர்ந்து உதவிய ஊழியர்களை, அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications