கருப்பு உடை போலீஸ்.. பரபரக்கும் காஞ்சிபுரம்.. அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி, அமித் ஷா வருகை?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பற்ற அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக ஆயுதம் தாங்கிய கருப்பு உடை போலீஸ் 40 பேர் காஞ்சிக்கு வந்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மூலவரான அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நீருக்குள் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. தினமும் அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில அத்திவரதரை தரிசிக்க முக்கிய விஐபிக்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை விரைந்தது. இதன்படி ஆயுதம் தாங்கிய கருப்பு உடை போலீஸ் 40 பேர் காஞ்சிக்கு பாதுகாப்புக்காக வருகை தந்துள்ளார்கள். கிழக்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் மேற்கு கோபுரம் பகுதியில் 20 பேரும் உள்ளனர்
இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் வர உள்ளதாகவும் அதனால் தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பரவி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்மாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை..
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications