காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. காரணம் இதுதான்.. முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் திங்கட்கிழமை பாடவேளையின்படி நாளை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு (பிளஸ் 2), பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேர்வுக்கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 3ல் முடிவடைய உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாளை பல மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் எனவும், திங்கட்கிழமைக்கான பாடவேளை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த அறிவிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications