காப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காப்புக்காட்டில்.. டிரஸ் கிழிக்கப்பட்டு.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கோமதி சடலமாக கிடந்ததை கண்டு பெண்கள் அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர்!

செங்கல்பட்டை அடுத்த காவித்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் தனியார் பள்ளி ஸ்கூல் பஸ்ஸின் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

Woman murdered near Kancheepuram

இவரது மனைவி கோமதி. 35 வயதாகிறது. இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக கோமதி, அருகில் உள்ள காப்புக் காட்டிற்கு அடுப்பெரிப்பதற்காக விறகு வெட்ட போவார். அவருடன் மேலும் 3 பெண்களும் விறகு வெட்ட உடன் செல்வார்கள். நேற்று மாலையும் இவர்கள் விறகு வெட்ட சென்றிருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில், 3 பெண்களும் வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்லவும், கோமதி மட்டும் இன்னும் கொஞ்சம் விறகு வெட்டி எடுத்து வருகிறேன்... நீங்க முன்னாடி போங்கள் என்று சொல்லி உள்ளார். அதனால் அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

ஆனால், கோமதி ரொம்ப நேரமாகியும் வரவே இல்லை. அதனால் அந்த பெண்கள் திரும்பவும் காப்புக் காட்டுக்கு சென்று கோமதியை தேடி இருக்கிறார்கள். அப்போதுதான், கோமதி கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது துணிகள் கிழிக்கப்பட்டு இருந்தன.

இதை பார்த்து அலறிய பெண்கள், உடனடியாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், போலீசார் விரைந்து கோமதியின் சடலத்தை மீட்டனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, மிக கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+