குமரியில் அதிர்ச்சி.. வாக்காளர் பட்டியலில் மாயமான 1000 மீனவர்களின் பெயர்கள்.. போராட்டம்!
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடந்து வருகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
கன்னியாகுமரியில் காலையில் இருந்து தேர்தல் நடந்து வருகிறது. அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் 1000 மீனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமாகி உள்ளது. கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்
ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் இப்படி விடுபடுவது இதுவே முதல்முறையாகும். அதிகாரிகளின் இந்த அலட்சியத்தை எதிர்த்து அங்கிருக்கும் மீனவர்கள் எல்லோரும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
எங்கள் பெயர் எப்படி மாயமானது, நாங்கள் போன தேர்தலில் வாக்களித்தோம். ஆனால் இந்த தேர்தலில் எப்படி பெயர் மாயமாகும் என்று இவர்கள் எல்லோரும் போராட்டம் செய்து வருகிறார்கள்.