கன்னியாகுமரி கள்ளக்காதலி தந்த தங்கமான லட்டு.. கனவிலும் எதிர்பார்க்காத சம்பவம்! ஆடிப்போன ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த இளம் ஜோடிதான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் ஹாட் டாபிக்காகி உள்ளது. வெளியூர்க்காரர்கள் என்று பெருந்தன்மையாக இடம் கொடுத்த அண்டை வீட்டாருக்கு, இவர்கள் கொடுத்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது ஆரல்வாய்மொழியில்?
ஒடிசா மாநிலம் மாலன்கிரி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பிரசாத் பாட்டில் என்பவர், தனது வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு நேரங்களில் கடையில் உள்ள நகைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அங்குள்ள லாக்கரில் வைப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நகைக்கடை தங்கம்
இவருடைய வீட்டுக்கு பக்கத்திலேயே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மரசு ஜான்பால் (21), இன்தூரி அர்ச்சனா (39) ஆகிய இருவரும் கணவன் மனைவி என்று சொல்லி, வாடகைக்குக் குடியேறியுள்ளனர். ஒருகட்டத்தில் சுபாஷ் பிரசாத்துடன் மிக நெருக்கமாகப் பழகிய இந்த ஜோடி, அடிக்கடி அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளது.
இந்தச் சூழலில், ஒருநாள் திட்டமிட்டபடி சுபாஷிற்கு லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுபாஷ் மயக்கமடைந்துள்ளார். அவர் மயங்கியதுமே, கேஸ் கட்டர் மூலம் வீட்டில் இருந்த லாக்கரை இந்த கள்ளக்காதல் ஜோடி உடைத்துள்ளது.. லாக்கரில் இருந்த முக்கால் கிலோ தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியும் ஓடிவிட்டது.
வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து பார்த்த சுபாஷ், நகைகளும் பணமும் கொள்ளை போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஒடிசா காவல்துறையில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த ஜோடி பற்றின தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போதுதான், மரசு ஜான்பால் மற்றும் இன்தூரி அர்ச்சனா ஆகிய 2 பேருக்குமே ஏற்கனவே வேறு வேறு நபர்களுடன் திருமணமாகிவிட்டதும், குடும்பத்தை உதறிவிட்டு இருவரும் கள்ளக்காதல் ஜோடியாக வலம் வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஸ்வீட் பாய்சன் லட்டு
அதுமட்டுமல்ல, இவர்கள் 2 பேருக்குமே கொள்ளைடிப்பதுதான் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது.. ஆனால், இவர்களது கொள்ளை பாணியே ரொம்பவே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலமாகச் செல்லும் இந்த ஜோடி, அங்கு பெண்கள் இல்லாமல் தனியாக வசிக்கும் வசதி படைத்த நபர்களையே குறிவைப்பார்கள். அவர்களுக்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, கணவன் மனைவி என்று சொல்லி குடியேறுவார்களாம்.. பிறகு மெல்ல அவர்களுடன் நட்பு வைத்து நெருங்குவார்கள்..
இந்த ஜோடியை முழுமையாக நம்பும் நேரத்தில், தயாராக வைத்துள்ள மயக்க மருந்து லட்டு எடுத்து சாப்பிட தருவார்களாம்... அதை சாப்பிட்டு மயங்கியதுமே, அவர்களது வீட்டில் நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்களாம்.
ஆரல்வாய்மொழியில் கனவிலும் நடக்க கூடாத சம்பவம்
ஒடிசாவில் கொள்ளையடித்த பிறகு இந்த ஜோடி தமிழகத்திற்குத் தப்பியோடி வந்துள்ளது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள்.. பிறகு ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 2 பேரும் வேலைக்கும் சேர்ந்துள்ளனர். இவர்களது நடமாட்டத்தை செல்போன் சிக்னல் மூலம் கண்காணித்த ஒடிசா தனிப்படை போலீசார், நாகர்கோவிலுக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்குள் நுழைந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். கைதான மரசு ஜான்பால் மற்றும் அர்ச்சனா ஆகிய 2 பேருமே தங்களது கொள்ளையை ஒப்புக் கொண்டனர்.. கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொள்ளை போன சொத்துக்களை மீட்பதற்காக ஒடிசா போலீசார் 2 பேரையும் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்களாம்.. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications