குலசேகரம் செல்போன் கடையில் திடீரென வெடித்த சார்ஜர்.. பலத்த சப்தத்தால் பரபரப்பு
கன்னியாகுமரி: குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவரது கடையில் இவர் செல்போன் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்தில் சார்ஜரில் வைத்திருந்த செல்போன் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.
வாழ்நாள் முழுக்க இனி இப்படி செய்ய மாட்டேன்.. கோர்ட்டில் பகிரங்க வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர்
இதில் தீப்பற்றியது. இதனால் அதிர்ந்து போன ராஜேஷ் என்ன செய்வது என சிறிது நேரம் அங்குமிங்குமாக ஓடினார். பின்னர் செல்போனில் இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். பகல் நேரம் என்பதால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.
மேலும் ராஜேஷும் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.