கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு துறை பள்ளிகளில் சேருவது எப்படி.. கலெக்டர் விளக்கம்
கன்னியாகுமரி: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் சேர விரும்பும் மாணவர்களுக்காக அறிவிப்புகளை கலெக்டர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் கடந்த 21-ந் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 5-ந் தேதி மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தினை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்ணான 04652-262060, 7401703507 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
விளையாட்டு விடுதியில் சேரவிரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 7-ந் தேதி காலை 7 மணி அளவில் ஆண்களுக்கும், 8-ந் தேதி பெண்களுக்கும் நடைபெறுகிறது. இதில் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications