ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள்.. எங்கள் அதிரடி தொடங்கிவிட்டது.. குமரியில் மோடி வார்னிங்!
ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது, என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது, என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அவர் தமிழகம் வந்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

வாய்ப்பு கிடைக்கும்
மோடி தனது பேச்சில், வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி செயல்படும்படி திருவள்ளுவர் கூறியுள்ளார். மக்கள் நேர்மையை விரும்புகிறார்கள்: குடும்ப அரசியலை அல்ல. மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்: ஊழலை அல்ல. மக்கள் விரும்புவது பாதுகாப்பை: அச்சத்தை அல்ல.மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை: வாக்கு அரசியலை அல்ல.

மீனவர்கள் என்ன
மீனவர்களுக்கான திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.விவசாயிகள் கடன் அட்டை திட்டம் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்காக ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளோம். இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மீனவர்களுக்கு கொடுத்துள்ளோம்.உள்ளூர் மொழியில், மீனவர்களுக்கு இந்த கருவி எச்சரிக்கை கொடுக்கும்.

நடவடிக்கை
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை போல வரி செலுத்துவோருக்கு சலுகை செய்கிறோம்.வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளோம்.இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வருமான வரி விலக்கை உயர்த்த யோசித்தது இல்லை.

பெரிய முன்னேற்றம்
தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி 77வது இடத்திற்கு வந்துள்ளது.ராஜாஜியின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். அம்பேத்கரை இரு முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ்.நாடாளுமன்ற மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைத்தது, பாரத ரத்னா விருது வழங்கியது பாஜக கூட்டணி அரசு, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications