கன்னியாகுமரி கள்ளக்காதல்.. இவரும் ஒரு தாய்? குழந்தையை வெந்நீரில் முக்கி, விலா எலும்பை முறுக்கி.. ஐயோ
கன்னியாகுமரி: தகாத உறவுகளும் அது தொடர்பான வன்முறைகளும், குற்றங்களும் வடமாநிலங்களை போலவே தமிழகத்திலும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி, நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.. கள்ளக்காதல் கொடுமையால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் தம்பதிகளின் குழந்தைகளாகவே இருப்பது பெரும் வேதனையை தந்து வருகிறது, 2 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த கொடூரமும், இது தொடர்பான வழக்கின் தற்போதைய தீர்ப்பும், மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை என்ற இடத்தில் வசித்து வரும் தம்பதி சீனு - பிரபுஷா.. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இதில் 2வது குழந்தை பிறந்து 15 மாதங்களாகின்றன.. அந்த குழந்தையின் பெயர் அரிஸ்டோ பியூலஸ்

இவர்களது வீட்டுக்கு பக்கத்திலேயே காஞ்சாம்புறத்தை சேர்ந்த சதாம் உசைன் என்ற 32 வயது நபர் ஓட்டல் நடத்தி வந்திருக்கிறார்.. இவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கள்ளக்காதல் ஜோடி
இந்நிலையில் 23 வயது பிரபுஷாவுக்கும், சதாம் உசைனுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் சீனுவுக்கு தெரிந்து மனவேதனையடைந்தார்.. இதனால் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். அப்போது முதல் குழந்தையை மட்டும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதனால் 15 மாத என்ற குழந்தையை பிரபுஷா வளர்த்து வந்தார்..
பிரபுஷா, சதாம் உசேன் இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்ததால், கடந்த 2023ல் இருவரும் மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.. இருவரையும் கணவன், மனைவி என்று சொல்லி, 2 நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.. அப்போது இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
உல்லாசத்துக்கு குழந்தை தடை
அந்த நேரத்தில் 15 மாத குழந்தை பசியால் அழுதிருக்கிறது.. உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையின் அழுகை சத்தம் இருந்தது சதாம் உசைனுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது..
இதனால், தடிமனான கம்பை எடுத்து வந்து குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்.. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதுள்ளது.. உடனே கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து, அந்த குழந்தைக்கு மதுபானத்தை ஊற்றி தூங்க வைத்துள்ளனர்.
இப்படி குழந்தைக்கு நாளுக்கு நாள் சித்ரவதைகளை இருவரும் சேர்ந்து தந்துள்ளனர்.. பிறகு, சிகரெட் நெருப்பால் 10 இடங்களில் சூடு வைத்துள்ளனர்.. அதிலும் அந்த குழந்தையை வெந்நீரில் முக்கி எடுத்திருக்கிறார்கள்.. இதனால் உடம்பெல்லாம் வெந்துபோய் குழந்தை அழுதவாறே இருந்துள்ளது.
விலா எலும்பு முறிந்தது
இதனால் கோபமடைந்த சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்துள்ளார்.. இதில் அந்த குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது.. இவ்வளவு கொடுமைகளை கள்ளக்காதலன் செய்தும்கூட, அசையாமல் நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாராம் பெற்ற தாய்.
இதற்கு பிறகு மூச்சு பேச்சின்றி குழந்தை இருந்ததால், உடனே மருத்துவமனைக்கு தூக்க சென்றுள்ளனர்.. ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பச்சிளம் குழந்தையை சித்ரவதை செய்தே கொன்றுவிட்டது இந்த கள்ள ஜோடி.. இறுதியில் இந்த தகவல் அஞ்சுகிராமம் போலீசாருக்கு எட்டிய நிலையில், இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அதிர்ந்த கன்னியாகுமரி
15 மாத குழந்தைக்கு மதுவை ஊற்றி, சிகரெட்டால் உடம்பை பொசுக்கி, வெந்நீரில் மூழ்க வைத்து, தரையிலேயே அடித்து விலா எலும்பையும் நொறுக்கி சித்ரவதை செய்து கொன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை அந்த நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது.. கொலை செய்த குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது, கடுமையான தண்டனை தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கொந்தளித்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.. அதில், சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications