Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.. விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி? நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என்பது அசாதாரண சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல், தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்யவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.

How to get Farmer Insurance under Prime Minister Crop Insurance Scheme ? collector explain

இந்த பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016-ல் தொடங்கியது. 2022ம் ஆண்டு நிலவரப்படி விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக கடந்த 6 ஆண்டுகளில் அக்டோபர் 31, 2022 வரை ரூ.1,25,662 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரீமியத் தொகையின் பெரும் பகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளதுடன் அதற்கான வழிமுறைகளையும் விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 6180 எக்டேரில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிக்கை பெறப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சுமார் 4930 எக்டேர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும், இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4203 பிரீமியமாக செலுத்தி ரூ.84 ஆயிரத்து 50 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின்பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.

இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அனுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+