சீன ஊடுருவலை தடுக்க முடியாத மோடி.. கச்சத்தீவு குறித்து பேச வந்துட்டாங்க! கனிமொழி அட்டாக்
கன்னியாகுமரி: சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்தியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பரப்புரையில் கனிமொழி பேசியதாவது: தலைவர் கலைஞர் கலர் டிவி தருவோம் எனக் கூறினார் சொன்னதைச் செய்தார், விவசாயக் கடனை ரத்து செய்தார், மக்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சிகள் தான் இன்று இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கிறது.
நாம் மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கும் போது, நாம் திட்டங்கள், வாக்குறுதிகள் சொல்லி வாக்கு கேட்போம், ஆனால் பாஜக என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். அதானி, அம்பானி, கார்ப்பரேட் நிறுவனத்திற்காக ஆட்சி நடத்தும் கட்சி தான் பாஜக. தேர்தல் பத்திரங்கள் என்பது சட்டம் பூர்வமாக ஊழலைச் செய்யக்கூடிய ஒரு வழி அதை சுப்ரீம் கோர்ட் நம்முடைய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று எனக் கூறிய நிலையில் பாஜக மிகப்பெரிய மோசடி செய்துள்ளது.
சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை. இமாச்சல் மாநிலத்தில் பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது சீனா, இப்பொழுது அருணாச்சலப் பிரதேசத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட 30 கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து அதன் பெயரைச் சீனா மொழியில் மாற்றி உள்ளது.
அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகக் கூறி, இதுவரை செய்துள்ளனர், ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தேர்தலுக்காக அதை எல்லாம் சொல்லுவோம் சொன்னதை எல்லாம் செய்ய முடியுமா எனக் கூறியிருந்தார். பிரதமர் மோடி 300, 400 தொகுதிகளில் வெற்றி எனச் சொல்லலாம், அவர் கூறுவதெல்லாம் நடக்கவா போகிறது, அவர் எவ்வளவு பெரிய ஊழல் வாதிகள் என்று மக்களுக்குத் தெரிந்து விட்டது.

சட்டப்பூர்வமாகப் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் ஊழல் செய்ய முடியும் என பாஜக காட்டியுள்ளது, தேர்தல் பத்திரம் விவகாரம் இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் சீனாவின் ஆக்கிரமிப்பு நாம் எடுத்துரைத்துப் பேசி வருவதால், கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பாஜக எழுப்பி உள்ளது. பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இவர்கள் கச்சத்தீவை மீட்டெடுத்து இருக்கலாம் அல்லவா.
நாகூர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் நமது மேயரும் மாவட்ட செயலாளருமான மகேஷ், பொறுப்பேற்றதற்குப் பின்பு மேம்படுத்தப்பட்டது, இப்பகுதியில் குடிநீர் தேவைக்குப் பூர்த்தி செய்வதற்காகக் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
நாம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை அமைத்தவுடன், சமையல் எரிவாயுவின் விலை 500 ஆகக் குறைக்கப்படும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என தெரிவித்தார். வரும் தேர்தலில் நமது வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications