Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: 17 வகை கூட்டுப் பொறியல்! 5 வகை குழம்பு! பொங்கல் பண்டிகையை விவரிக்கும் நாஞ்சில் சம்பத்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகை அன்று தனது வீட்டில் 17 வகையான கூட்டுப் பொறியல்களுடன் 5 வகையான குழம்பு வைத்து விருந்து பரிமாறப்படும் எனக் கூறுகிறார் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அறிவதற்காக நாஞ்சில் சம்பத்திடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம்.

புதுப்பானையில் பொங்கி வரும் பொங்கலை போல் மகிழ்ச்சி ததும்ப தமிழர் திருநாள் கொண்டாட்டம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் பின்வருமாறு;

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை


''நான் கொண்டாடுகின்ற ஒரே பண்டிகை பொங்கல் மட்டும் தான். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கலை கொண்டாடுவதற்காக வீடு வந்து சேர்ந்துவிடுவேன். தீபாவளி உட்பட எந்த பண்டிகைக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பொங்கலுக்கு கொடுப்பேன். காலத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து மகிழ்வேன். உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துச்சொல்லி வாழ்த்துப் பெற்றுக்கொள்வேன்.''

 17 வகை கூட்டுப் பொறியல்

17 வகை கூட்டுப் பொறியல்

''பொங்கல் அன்று எனது வீட்டில் 17 வகையான கூட்டுப்பொறியல்களும் 5 வகையான குழம்புகளும் வைத்து விருந்து பரிமாறப்படும். ரத்த சொந்தங்களுடன் அமர்ந்து அதை சாப்பிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறு எதுவுமே இருக்காது. இஞ்சித்தீயல், மாங்காய்பச்சடி, நார்தங்கா கூட்டு, பூசனி எரிசேரி, சிங்கன் வாழை விழுக்கு பிரட்டு, அவரை பொறியல், அன்னாசிப்பழக்கூட்டு, உருளை கூட்டுக்கறி, கும்பளங்காய் கிச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, விலாங்காய் கூட்டு, கதம்ப பச்சடி, கத்திரிக்காய் வறுவல், நேந்திரங்காய் சிப்ஸ், உப்பேறி என 17 வகையான சைட் டிஷ்களோடு சாதம், பாயாசம், அப்பளம் என இன்னும் சில பண்டங்களும் வீட்டில் தயாரிப்பார்கள்.''

புத்தாடை பரிசு

புத்தாடை பரிசு

''வீட்டில் பணியாற்றுபவர்கள், ஆதரவற்றவர்கள் என பலருக்கும் நான் பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்தாலும் எனக்கு ஒரு தம்பி புத்தாடை எடுத்துக்கொடுப்பார். நாகராஜ் என்ற அந்த தம்பி இதை பல வருடமாக வழக்கமாக வைத்திருக்கிறார். அதை என்னால் தட்ட முடியாத அளவுக்கு அன்பு கொண்ட தம்பி அவர். வீட்டில் ஒரு விசேஷம் வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல் எங்கள் வீடு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.''

தை பிறந்தால்

தை பிறந்தால்

பொங்கல் அன்று மதியம் வரை வாழ்த்துக் கூறவும் வாழ்த்துப்பெறவுமே எனக்கு நேரம் போதாது, மதியம் விருந்து சாப்பிட்டவுடன் உறங்குவதை வழக்கமாக கொண்டவன். வேறெங்கும் சுற்றும் பழக்கம் எனக்கில்லை. இப்படித்தான் பொங்கல் பண்டிகையை நான் கொண்டாடி வருகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பக்கூடிய தமிழர்களில் நானும் ஒருவன் என்பதால், மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் இந்த பொங்கலை கொண்டாட காத்திருக்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+